Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமியை காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த காவலர்! – தொடரும் அவலங்கள்!

சிறுமியை காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த காவலர்! – தொடரும் அவலங்கள்!
, வியாழன், 5 டிசம்பர் 2019 (10:13 IST)
ஹைதராபாத் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டு அதிர்விலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

உத்தர பிரதேசத்தில் முன்னாள் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றியவரின் மகன் ஜெய்பிரகாஷ் மவுரியா. இவர் தனது சகோதரி வாழும் ஊரான ஹலியா கிராமத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கே 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் இவருக்கு பழக்கமாகியுள்ளார். ஒருநாள் சிறுமிக்கு போன் செய்து கிராமத்திற்கு வெளியே இருக்கும் சாலைக்கு வர சொல்லியிருக்கிறார் ஜெய்பிரகாஷ்.

சாலைக்கு வந்த சிறுமியை தனது நண்பர்கள் மூன்று பேர் உதவியுடன் காரில் கடத்தியிருக்கிறார். அவரது மூன்று நண்பர்களில் ஒருவர் பாதுகாப்பு படை காவலர் மகேந்திர குமார் யாதவ். காவல் வாகனத்திலேயே சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

செல்லும் வழியில் சுங்க சாவடியில் சோதனையின்போது சிறுமி கதறி அழுததை கேட்டு உஷாரான சுங்க சாவடி அதிகாரிகள் காரை மறித்து சிறுமியை மீட்டுள்ளனர். காரில் சிறுமியை கடத்திய ஜெய்பிரகாஷ், காவலர் மகேந்திர குமார் மற்றும் அவரது நண்பர்கள் மேல் ஆள்கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதுபோன்ற பாலியல் குற்றங்களிலிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டிய காவலரே இந்த செயலை செய்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் இந்த குற்றங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாங்காங் கப்பலில் சென்ற இந்தியர்கள் கடத்தல்! – கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!