Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதை கூடவா திருடுவீங்க.. கொரோனா நோயாளிகள் துணி திருட்டு! – உ.பியில் பிடிபட்ட குடும்பம்!

Advertiesment
National
, திங்கள், 10 மே 2021 (12:08 IST)
உத்தர பிரதேசத்தில் கொரோனா நோயாளிகம் மீது போர்த்திய துணியை திருடிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மயானத்திற்கு கொண்டு செல்லப்படும் பிணங்களின் மீது போர்த்தப்படும் துணி, குர்தா, புடவை உள்ளிட்டவை திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இதுபோன்று பிணங்களின் ஆடைகளை திருடி பாலிஷ் செய்து புது துணியென வெளியில் விற்று வந்தது தெரிய வந்துள்ளது. இதற்காக சில துணிக்கடைகளே இவர்களுக்கு பணம் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கும்பலை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் சென்னை மருத்துவமனையில் அனுமதி!