Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுபுர் சர்மாவை கைது செய்ய கோரிய போராட்டத்தில் வன்முறை! – 136 பேர் கைது!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (08:46 IST)
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக தலைமை நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று நாடு முழுவதும் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசத்திலும் பலர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

உத்தர பிரதேசத்தில் மொரதாபாத், பிரக்யாராஜ் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே எழுந்த மோதலில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. கற்களை போராட்டக்காரர்கள் வீசியதால் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடராதிருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments