Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 6 கோடி பரிசு! – யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு!

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (12:37 IST)
ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி பரிசளிக்கப் போவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானில் தொடங்க இருக்கிறது. பல்வேறு நாட்டிலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் சென்ற ஆண்டு பல்வேறு நாடுகளில் நடைபெற்றன.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் உத்தர பிரதேச வீரர்கள், வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அதன்படி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கம் வெல்பவர்களுக்கு 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்பவருக்கு 4 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வெல்பவருக்கு 2 கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தியா சார்பாக ஜப்பான் ஒலிம்பிக்கில் பங்குபெறும் உத்தர பிரதேச வீரர்களுக்கு 10 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments