Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: அரசின் அதிரடி உத்தரவு..!

Siva
திங்கள், 13 ஜனவரி 2025 (08:40 IST)
ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் கொடுக்க வேண்டும் என்றும் உத்தர பிரதேச அறிவித்துள்ளது.  

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க உத்தரப்பிரதேச அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க கூடாது என பெட்ரோல் நிலையங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு போக்குவரத்து கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் ’சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் விபத்துகள் அதிகரித்து வருவதும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், ஹெல்மெட் அணியாததால் தான் இந்த உயிரிழப்பு நடைபெறுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments