Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டு ரெண்டு பேரா போய் சோலிய முடிங்க! – உ.பியில் விநோத கழிவறையால் மக்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (10:18 IST)
உத்தர பிரதேசத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறையில் ஒரே அறைக்குள் இரு கழிப்பிடங்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாடு முழுவதும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் தனி கழிப்பறையும், தெருக்களுக்கு பொது கழிப்பறையும் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் இந்த திட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் கமிஷன் அடிக்க நினைப்பதால் முழுமையாக கழிவறை கட்டப்படுவதில்லை என மக்கள் புகாரும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் பாஸ்தி மாவட்டத்தில் அதிகாரிகள் கட்டித்தந்துள்ள கழிப்பறையை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொது கழிப்பறையாக கட்டப்பட்ட அதில் ஒரே அறைக்குள் இரண்டு கழிப்பிடங்கள் அருகருகே வைக்கப்பட்டுள்ளது. இதில் எப்படி ஒரே நேரத்தில் இருவர் செல்ல முடியும் என மக்கள் குழம்பியுள்ள நிலையில், சிறுவர்களின் உபயோகத்திற்காக அப்படி கட்டப்பட்டதாக அதிகாரிகள் சமாளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்.. ஆனால் செங்கோட்டையன் உள்ளே..

இந்த பழத்தையா நல்லத்தில்லன்னு சொன்னீங்க! லைவாக தர்பூசணியை அறுத்து வீடியோ போட்ட எம்.எல்.ஏ!

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

அடுத்த கட்டுரையில்
Show comments