Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னொரு ரௌடியும் எண்கவுண்ட்டர்; உ.பியில் போலீஸ் ‘தர்பார்’!

Advertiesment
Uttar Pradesh
, வியாழன், 9 ஜூலை 2020 (08:42 IST)
உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே மீதான தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு கூட்டாளி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி விகாஸ் துபேவை உத்தர பிரதேச போலீஸார் பிடிக்க சென்றபோது ரௌடிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸார் உயிரிழந்தனர். தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து விகாஸ் துபே மற்றும் கூட்டாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் விகாஸ் துபேவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விகாஸ் துபேவின் கூட்டாளியான அமர் துபே ஹமர்பூர் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து இன்று அதிகாலை விகாஸ் துபேவின் மற்றுமொரு கூட்டாளியும், கான்பூரில் போலீஸாரை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவருமான பஹுவா துபேயை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடகை கேட்ட ஹவுஸ் ஓனர்; குத்திக் கொன்ற அஜித்! – குன்றத்தூரில் பரபரப்பு!