Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா பரவல் எதிரொலி: யூ.பி.எஸ்.இ தேர்வுகள் ஒத்திவைப்பு!

கொரோனா பரவல் எதிரொலி: யூ.பி.எஸ்.இ தேர்வுகள் ஒத்திவைப்பு!
, வியாழன், 13 மே 2021 (18:56 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இதனை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27-ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முன்னதாக சிவில் சர்வீஸ் தேர்வு நேர்காணல் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நேர்காணலின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுக்கைகள் இல்லை… தரையில் படுக்க வைத்து சிகிச்சை!