வகுப்பறையில் மது அருந்தி கொண்டே பாடம் நடத்திய ஆசிரியர்: சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (18:04 IST)
வகுப்பறையில் மது அருந்தி கொண்டே பாடம் நடத்திய ஆசிரியர்: சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வகுப்பில் மது அருந்திக்கொண்டே பாடம் நடத்திய ஆசிரியரின் வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக சைலேந்திர சிங் கவுதம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே பீர் பாட்டிலை குடித்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியர் மீது உத்தரபிரதேச காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது. இதனை அடுத்து ஆசிரியர் சைலேந்தர சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments