உபியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடக்கம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (20:50 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கும் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது ஏற்கனவே தெரிந்ததே
 
பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது என்பதும் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments