Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பாக்கி சூட்டிற்கு முன் கேமராவை உடைத்த போலீஸ்: வெளியானது வீடியோ!

துப்பாக்கி சூட்டிற்கு முன் கேமராவை உடைத்த போலீஸ்: வெளியானது வீடியோ!
, வெள்ளி, 27 டிசம்பர் 2019 (11:42 IST)
உத்தர பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் சிசிடிவி கேமராக்களை போலீஸார் உடைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் உத்தர பிரதேசம் மீரட்டில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெறும் முன்னர் சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து பாதுகாப்பு உடைகளை அணிந்து கொள்ளும் போலீஸ்க்காரர்கள் தடியை எடுத்து சிசிடிவி கேமராக்களை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலர் போலீஸ் முன்னரே துப்பாக்கிசூடு குறித்த திட்டங்களோடு வந்திருக்கலாம். ஆதாரம் கிடைக்கக்கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராக்களை உடைத்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் முறைகேடு: வாக்குபதிவு நிறுத்தம்!