Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசு குறைய யாகம் நடத்த வேண்டும்! – உ.பி அமைச்சர் கருத்து!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (14:30 IST)
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள சூழலில் காற்று மாசு குறைய யாகம் நடத்த வேண்டும் என அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லி தீவிரமான காற்று மாசுபாடுக்கு உள்ளாகியிருக்கிறது. மக்கள் வெளி இடங்களில் நடமாட மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு விளையாட வந்துள்ள வங்கதேச வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டே பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் இன்று முதல் டெல்லியில் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாசு ஓரளவு கட்டுப்படும் என்றாலும் முழுமையாக குறைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இந்த காற்று மாசுபாடு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த உத்தர பிரதேச அமைச்சர் சுனில் பராலா “காற்று மாசுப்பாட்டை குறைக்க அரசு மழை கடவுளான இந்திரனுக்கு யாகம் செய்ய வேண்டும். காற்று மாசுபாடை அவர் பார்த்து கொள்வார்” என பேசியிருக்கிறார்.

இந்த காற்று மாசு பிரச்சினையை அறிவியல்ரீதியாக எப்படி அணுகுவது என்பதை விடுத்து, ஆன்மீக யாகம் செய்ய சொல்லி அமைச்சர் பேசுவது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments