Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லை: பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவி!

பாலியல் தொல்லை: பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவி!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (13:22 IST)
உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனக்கு தொடர்ந்து இளைஞர் ஒருவன் பாலியல் தொல்லை தருவதாகவும், அதிலிருந்து தன்னை காப்பாற்ற வேண்டியும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.


 
 
நாட்டின் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் பாலியல் தொடர்பான அத்துமீறல்கள் அதிகமாகவே நடக்கிறது. தினமும் செய்திகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பான செய்திகளில் உத்திரப்பிரதேசம் மாநிலம் அதிகமாக வருகின்றன. சமீபத்தில் காதலர்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தற்போது முசாபர் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தான் பாலியல் தொலைக்கு ஆளானதாகவும், தனக்கு நீதி வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இளைஞர் ஒருவர் தன்னை கடந்த ஒரு வருடமாக பின் தொடர்வதாகவும், அவ்வப்போது பாலியல் தொல்லைகள் தருவதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும் அந்த இளைஞர் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதால் தன்னால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு கூட பயமாக உள்ளது. எனவே எனக்கு உரிய நீதி வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அந்த மாணவி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்