Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தி என்னை கட்டிப்பிடித்தால்? உபி முதல்வர் யோகி எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (22:18 IST)
பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தது போல் என்னை ராகுல்காந்தி கட்டிப்பிடிக்க 10 தடவை யோசிக்க வேண்டும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
 
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் நடந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியையும், பாஜக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் திடீரென மோடி அருகில் சென்று அவரை கட்டிப்பிடித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இதுகுறித்து பேட்டியளித்த உபி முதல்வர் யோகி, 'ராகுல் காந்தி, மோடியை கட்டிப் பிடித்தது வெறும் அரசியல் நோக்கத்திற்காகவே. இதுபோன்ற சம்பவத்தை நானாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ராகுல் காந்தியின் இந்த செயல்பாடு குழந்தைத்தனமானது. சொந்தமாக முடிவு எடுக்கும் அறிவு அவருக்கு கிடையாது. எந்த ஒரு புத்தியுள்ள மனிதனும் பிரதமரைக் கட்டிப்பிடித்திருக்க மாட்டான். பிரதமரை கட்டிப்பிடித்தது போல் ராகுல் காந்தி என்னை கட்டிப்பிடிப்பதற்கு முன்னர் 10 தடவை யோசிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments