Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2027ல் இந்தியா முதலிடம் பிடிக்கும் – எதில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (13:24 IST)
ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் உலகத்தின் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து வெளியிட்ட அறிக்கையில் எந்தெந்த நாடுகளில் மக்கள்தொகை குறையும், எந்தெந்த நாடுகளில் அதிகரிக்கும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது உலகின் மொத்த மக்கள் தொகை 770 கோடியாக உள்ளது.

இது 2050ம் ஆண்டில் 950 கோடியாக அதிகரிக்கும் என்றும், இந்த நூற்றாண்டு முடியும்போது தோராயமாக 1100 கோடியாக அதிகரித்திருக்கும் என்றும் கூறியுள்ளது. தற்போது ஆண்டொன்றுக்கு மக்கள் தொகை அதிகரித்து வரும் நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி அதிக மக்கள்தொகை உள்ள நாடு சீனா. ஆனால் அங்கே மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே சீனாவின் மக்கள் தொகை அதிகரிப்பு 2050க்குள் 3 கோடி அளவுக்கு குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 120 கோடியாக உள்ளது. இது 2050க்குள் அதிகரித்து இந்தியா உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக மாறிவிடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments