Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வன உயிரியல் பூங்காக்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (14:24 IST)
உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், மனித உயிர்களை பலிக்கொண்டு வருகிறது. மேலும் நாடுகளின் பொருளாதார சூழ்நிலையையும் சீர்குலைத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் Bronx Zoo-வில் இருக்கும் அந்த புலிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த உயிரியல் பூங்காவில் உள்ள 6 புலிகளுக்கும் சிங்களுக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த உயிரியல் பூங்காவில் பணியாற்றிய ஊழியர்கள் யாருக்காவது கொரோனா இருந்து அவர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவி இருக்கும் என கூறப்படுகிறது. 

 
இந்த நிலையில், அமெரிக்கா வனஉயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று எதிரொலியை அடுத்து, இந்தியாவில் உள்ள வன உயிரியல் பூங்காகளுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை *  விடுத்துள்ளது.

மேலும், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க அதன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட விலங்குகளை தனிமையில் வைத்து கண்காணிக்கவும், ஒருவேளை விலங்குகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவற்றின்  ரத்த மாதிரிகளை உடனடியாக ஆய்வகங்களுக்கு அனுப்ப வைக்கவும் உத்தரவிட்டுள்ளது .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments