Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: பதற்றத்தில் ஜம்மு காஷ்மீர்

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (12:30 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
புல்வாமா தாக்குதல், அதன் பின்னர் எல்லையில் அத்துமீறி நடத்தப்பட்ட தாக்குதல் என அனைத்திலும் இருந்த பதற்றமான சூழ்நிலை மறைந்தது. அதற்குள் ஜம்முவில் தற்போது நடந்த குண்டு வெடிப்பு அங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. 
 
இந்த குண்டு வெடிப்பின் காரணமாக பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிர் சேதம் ஏதுமில்லை என கூறப்படுகிறது. 
 
இருப்பினும் குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் போலீஸார் குவிகப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துக்குள் குண்டு வெடித்ததாக் கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு யாரால் நடத்தப்பட்டது? என்ன காரணத்திற்காக நடத்தப்பட்டது? என எந்த தகவல்களும் வெளியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments