Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி வீடு கட்டி தருவாரா? நாங்க கட்டி தரணுமா? – உத்தவ் தாக்கரே கேள்வி!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:55 IST)
குடியுரிமை சட்டத்தை மகாராஷ்டிராவில் அனுமதிக்க முடியாது என கூறியுள்ள அம்மாநில முதல்வர் அதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்த நிலையில் பல்வேறு மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளன. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குடியுரிமை சட்டத்தை மகாராஷ்டிராவில் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகார நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள அவர் ”பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக நுழைந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது சிவசேனாவின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். குடியுரிமை சட்டத்தால் மக்களை வெளியேற்ற முடியாது. ஆனால் தேசிய குடியுரிமை பதிவு இந்து, முஸ்லீம்களையும் பாதிக்கும்.

அண்டை நாட்டு சிறுபான்மை மக்களை பிரதமர் அனுமதித்தால் எந்தெந்த மாநிலங்களில் அவர்களை குடியமர்த்துவார்? மகாராஷ்டிராவில் அவர்கள் எந்த பகுதியில் குடியமர்த்தப்படுவார்கள்? அவர்களுக்கு வீடு பிரதமர் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படுமா? இங்கு இருப்பவர்கள் பலருக்கு ஏற்கனவே வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments