Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிர்பயா வன்கொடுமை வழக்கு; தனி தனியாக தூக்கிலிட முடியாது; நீதிமன்றம்

நிர்பயா வன்கொடுமை வழக்கு; தனி தனியாக தூக்கிலிட முடியாது; நீதிமன்றம்

Arun Prasath

, புதன், 5 பிப்ரவரி 2020 (16:03 IST)
நிர்பயா குற்றவாளிகள்

நிர்பயா குற்றவாளிகளை தனிதனியாக தூக்கிலிட முடியாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படுவர் என எதிர்பார்த்த நிலையில், குற்றவாளிகள் தொடர்ந்து புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றவில்லை.

பின்பு அம்மனுக்களை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரை தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்தும், குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட வேண்டும் எனவும், மத்திய அரசு மற்றும் திகார் சிறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பாட்டியாலா நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய மறுத்துவிட்டது, மேலும் 4 குற்றவாளிகளையும் தனி தனியே தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் !