Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கு ரூ.700 கோடியா? நாங்கள் சொல்லவே இல்லை: ஐக்கிய அரபு அமீரகம்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (16:19 IST)
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம், ரூ.700 கோடி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

 
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர்.
 
கேரள மாநிலத்துக்கு வெள்ள் நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலம் முழுவதும் பல நாடுகளில் இருந்து வந்தது. மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து ஐக்கிய அர்பு அமீரகம் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி அறிவித்தது என்ற செய்தி வெளியானது. 
 
இதையடுத்து மத்திய அரசை பலரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் மத்திய அரசு வெளிநாடுகளின் உதவியை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம், வெள்ள நிவாரண நிதி ரூ.700 கோடி வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா கூறுயதாவது:-
 
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மறு சீரமைப்பு பணிக்கு தேவையான உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான குறிப்பிட்ட அளவு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments