Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிக் டாக் வீடியோவால் பலியான வாலிபர்கள்..

டிக் டாக் வீடியோவால் பலியான வாலிபர்கள்..

Arun Prasath

, சனி, 28 செப்டம்பர் 2019 (15:35 IST)
டிக் டாக் வீடியோவால் ரயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் ஹெட்ஜ்நகரை சேர்ந்த அப்தாப்ஷெரீப் மற்றும் முகமது மாடின் என்ற வாலிபர்கள், நேற்று மாலை இவர்கள் அதே பகுதியை சேர்ந்த அவ்ர்களது நண்பரான ஜபியுல்லாகானுடன் ரயில்வே தண்டவாள பகுதியில் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ரயில் இவர்கள் மீது மோதியது. இதில் அப்தாப்ஷெரீப், முகமது மாடின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜபியுல்லாகான் படு காயம் அடைந்தார். உடனே இத்தகவலை அறிந்து விரைந்து வந்த போலீஸார், ஜபியுல்லாகானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீக்கிய போலீஸ் அதிகாரி அமெரிக்காவில் சுட்டுக்கொலை! பகீர் சம்பவம்