Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓலா, உபெர் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை.. டெல்லி அரசின் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:01 IST)
ஓலா, உபெர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களின் இருசக்கர டாக்ஸி சேவைகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அனுமதி இல்லாமல் இருசக்கர வாகன டாக்ஸி சேவைகள் இயக்கப்படுவது சட்டப்படி குற்றம் என்று இதனால் உடனடியாக இந்த சேவையை நிறுத்த வேண்டும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த உத்தரவை மீறினால் முதல் முறை ஐயாயிரம் இரண்டாவது முறை பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் இரு சக்கர வாகன சேவையுடன் கூடிய செயலிகள் இருந்தால் ஒரு லட்சம் அபதாரம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே கர்நாடக, மகாராஷ்டிரா மாநிலங்கள் இருசக்கர டாக்ஸி சேவைகளை தடை செய்துள்ள நிலையில் தற்போது டெல்லி அரசும் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments