Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப்பில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து..! ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பரபரப்பு..!

Senthil Velan
ஞாயிறு, 2 ஜூன் 2024 (13:06 IST)
பஞ்சாப் மாநிலத்தில் 2 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
 
பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் அருகில் உள்ள மாதோப்பூர் பகுதியில் இன்று காலை நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு ரயிலின் இஞ்சின் தடம் புரண்டு பயணிகள் ரயில் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 லோக்கோ பைலட்டுகள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பயணிகள் நின்றுகொண்டிருந்ததால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  விபத்து காரணமாக அந்த வழியாக ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

ALSO READ: கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..! விமான நிலையத்தில் பரபரப்பு..!!

சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே துறை அதிகாரிகள்,  தண்டவாளத்தில் விழுந்துள்ள  ரயில்களின் பெட்டிகளை அகற்றவும், ரயில் போக்குவரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே தண்டவாளத்தில் எப்படி இந்த 2 ரயில்களும் வந்தன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments