Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை –பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (12:42 IST)
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை காஷ்மீர் போலிசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரின் சூது கொதைர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் அந்த வீட்டை நள்ளிரவு 2 மணிக்கு சுற்றி வளைத்தனர்.

போலிஸார் சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் வீட்டுக்குள் இருந்த படியே துப்பாக்கியால் சுட்டனர். போலிஸாரும் அவர்கள் மேல் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த இரண்டு தீவிரவாதிகளும் போலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் டிஜிபி வி கே பிர்தி ’முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அங்கு இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments