Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (15:40 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக கேரள மாநிலத்தில் தினமும் சுமார் முப்பதாயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் நிபா வைரஸ் பொது மக்களை பயமுறுத்தி வருகிறது. இன்று காலை நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவன் மரணம் அடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காரணமாக பலியான நிலையில் தற்போது மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் அரசு மருத்துவமனையிலும் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இருவரும் தனி வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது 
 
அது மட்டுமின்றி மறைந்த 12 வயது சிறுவனிடம் தொடர்பில் இருந்த 188 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுவனின் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments