Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊடகங்களில் செய்தி பதிவுகள் நீக்கம்!?; கோரிக்கை விடுத்த இந்தியா! – ட்விட்டர் தகவல்!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (09:04 IST)
ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பதிவுகளை நீக்கும்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கோரிக்கைகள் அதிகம் வந்ததாக ட்விட்டர் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரின் நிலைபாடு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் தற்போது வெளியிட்ட திறந்த நிலை தகவலில் உலக நாடுகள் பல அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடகவியாலாளர்களின் பதிவுகளை நீக்கும்படி கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளது.

ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை தெரிவிக்கும் படி அதிக கோரிக்கை விடுத்ததில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாமிடத்திலும் உள்ளன. அதுபோல ஊடக பதிவுகளை நீக்க கோரியதில் ஜப்பான் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் ட்விட்டர் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments