Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரட்டையர்களின் உயிரை பறித்த கடல் அலை : இது முதல் முறை அல்ல!

இரட்டையர்களின் உயிரை பறித்த கடல் அலை : இது முதல் முறை அல்ல!
, செவ்வாய், 26 ஜூன் 2018 (12:50 IST)
மேற்கு வங்காளத்தில் உள்ள கடலில் குளிக்க சென்ற இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மேற்கு வங்காளத்தில் மந்தர்மணி என்கிற புகழ்பெற்ற கடற்கரை இருக்கிறது. இங்கு இரட்டையர்கள் இருவரும் தங்களது இரு நண்பர்களுடன் இந்த கடற்கரைக்கு குளிக்க சென்றனர். அவர்கள் இருவரும் கல்லூரிகளில் பொறியல் படிப்பு படித்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில், அவர்கள் இருவர் மற்றும் நண்பர்களில்  ஒருவர் என மூன்று பேர் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது, திடீரென வந்த ராட்சத அலை அவர்களை இழுத்து சென்றது. அங்கிருந்த மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த இரட்டையர்கள் இறந்து விட்டனர்.
webdunia

 
கடந்த 2017ம் வருடம் இதே கடலில் 3 ஐ.டி நிறுவன ஊழியர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், அதே ஆண்டு அந்த கடற்கரையில் வாகன விபத்தில் 2 பேர் பலியாகினர். தற்போது கடல் அலையில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்த கடற்கரை கொலைகார கடற்கரையாக மாறி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜீவ் காந்தியை போல் மோடியையும் கொலை செய்ய சதி; உள்துறை அமைச்சகம் பிரமருக்கு அறிவுரை