Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”காய்ச்சல், இருமல் இருந்தால் ஏழுமலையானை பார்க்க வரவேண்டாம்”.. திருப்பதி தேவஸ்தானம்

Arun Prasath
திங்கள், 9 மார்ச் 2020 (12:42 IST)
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில் காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருந்தால், அது குணமாகும் வரை ஏழுமலையானை தரிசிக்க வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதியில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரச்சாரம் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் மற்றவர்களிடம் பேசும் போது 3 அடி தூரத்தில் இருந்தபடியே பேசவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காய்ச்சல் இருப்பவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருப்பதி சிம்ஸ் மருத்துவமனயில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் திருமலையில் தரிசிக்க வரும் பக்தர்கள், காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் குணமாகும் வரை ஏழுமலையானை தரிசிக்க வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments