Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா: என்ன காரணம் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (15:32 IST)
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அம்மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது
 
இந்த நிலையில் மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற போதிலும் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் முதல்வராக பதவியேற்ற போதிலும் 6 மாதத்திற்குள் எம்எல்ஏவாக வேண்டும்
 
இதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிபூர் என்ற தொகுதியை போட்டியிட்ட மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சொவந்திப் சேட்டர்ஜி என்பவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் தான் மம்தா பானர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments