Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நாளில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:46 IST)
தேர்தல் நாளில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்: மேற்குவங்கத்தில் பரபரப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 7ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்று கார்தா. இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் காஜல் சின்ஹா என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில் இன்று காலை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்ஹா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மேற்கு வங்க மாநிலத்தில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தொற்றால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments