Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம்பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தை பேனராக வைத்து கொடுமை!

இளம்பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தை பேனராக வைத்து கொடுமை!
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (21:50 IST)
கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் மம்தா பேனர்ஜி, துர்கா தேவிக்கான அணிவகுப்பில் கலந்துக் கொண்டார்.


 
 
இதை விமர்சித்து 21 வயது மாணவி ராஜஸ்ரீ தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இதை அறிந்த, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், அப்பெண் குடியிருக்கும், பகுதியில், அவரின் புகைப்படத்துடன், ஃபேஸ்புக் பக்கத்தை 5-அடி உயர பெரிய பேனராக வைத்து, அப்பெண்ணை அவமானப்படுத்தியுள்ளனர்.
 
மேலும் அதில் "Shame on you" என எழுதப்பட்டிருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் சிலர் அந்த பெண் வீட்டிற்கு சென்று மம்தா பேனர்ஜியிடம் மன்னிப்பு கேட்க சொல்லியும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்ரீயின் குடும்பத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஒரு நீதி; காவிரிக்கு ஒரு நீதியா? - கருணாநிதி