Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.3-க்கு ரயில் டிக்கெட் முன்பதிவு!!!

ரூ.3-க்கு ரயில் டிக்கெட் முன்பதிவு!!!
, வியாழன், 20 அக்டோபர் 2016 (17:00 IST)
இணையதள இணைப்பு இல்லாமல், வெறும் 3 ரூபாய் செலவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

 
இணையதள இணைப்பு உள்ளவர்கள் ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., வெப்சைட்டிலும், மொபைலில் இணையதளம் வைத்துள்ளவர்கள் ரயில்வே ஆப்ஸ் மூலம் முன்பதிவு செய்துவருகின்றனர். ஆனால் இணையதள வசதி இல்லாதவர்கள் வெகுநேரம் ரயில்வே நிலையத்தில் காத்திருந்து, முன்பதிவு செய்யும் நிலை உள்ளது. 
 
இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.3 செலவில் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போனில் இருந்து, '139' என்ற எண்ணுக்கு, முன்பதிவிற்கான தகவல்களை SMS அனுப்பி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
 
இந்த வசதியை பெற ஐ.ஆர்.சி.டி.சி., கணக்கு மற்றும் அதோடு ஒரு வங்கி கணக்கை இணைத்து கொள்ள வேண்டும். வங்கி கணக்கிற்கு பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை உபயோகிக்க வேண்டும்.
 
இந்த முறையை பயன்படுத்தி, டிக்கெட்டை ரத்து செய்யவும் முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக இருக்கும் பிரதமர் மோடி!