ரயில் நிலையங்களில் செயலிகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (18:11 IST)
ரயில் நிலையங்களில் செயலிகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!
ரயில் நிலையங்களில் ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு காலதாமதத்தை தவிர்க்க தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது
 
இந்த நிலையில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரத்தில் தோன்றும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற செல்போன் செயலி மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ள வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 
மேலும் நடைமேடை டிக்கெட்டும் க்யூஆர் கோடு முறை மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இந்த க்யூஆர் கோடு வசதி மூலம் சீசன் டிக்கெட்டையும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments