Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன் - மனைவி சண்டை.. மகன், மகளை கொன்று தம்பதியினர் தற்கொலை..!

Mahendran
வியாழன், 16 ஜனவரி 2025 (13:16 IST)
ஈரோடு மாவட்டத்தில் கணவன் மனைவி சண்டை காரணமாக மகன் மகளை கொன்று அந்த தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தனசேகர் மற்றும் பாலாமணி தம்பதிக்கு வந்தனா என்ற மகளும் மோனிஷ் என்ற மகனும் இருந்து வந்தனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனசேகர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப சண்டை வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே சண்டை தீவிரமடைந்ததை அடுத்து விஷ மாத்திரைகளை எடுத்து, மகன் மற்றும் மகளுக்கு கொடுத்து கொலை செய்தனர். அதன் பின்னர், கணவன் மனைவி இருவரும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், தனசேகரன், பாலாமணி மற்றும் இரண்டு குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தனசேகரன் மற்றும் பாலாமணி ஆகிய இருவரும் முதலில் உயிரிழந்தனர்.

அதன் பிறகு, குழந்தைகள் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.

சாதாரண குடும்பச் சண்டையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments