டெல்லியில் போக்குவரத்து அபராதம் தள்ளுபடி: தமிழ்நாட்டுக்கும் இது பொருந்துமா?

Mahendran
செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (12:03 IST)
டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கான அபராதங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், இந்த நடைமுறை தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லியில் போக்குவரத்து காவல்துறையினர், சீட் பெல்ட் அணியாதது, ஹெல்மெட் அணியாதது, அதிவேகம், சிக்னல் விதிகளை மீறுவது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உட்பட 13 வகையான சிறு விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளனர்.
 
இந்த தள்ளுபடி, தேசிய லோக் அதாலத் மூலம் வரும் 13-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும், அபராதத்தை முழுமையாகவோ அல்லது 50% வரை குறைக்கவோ வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த நடைமுறை குறித்து தமிழக அரசு வட்டாரங்களில் கேட்டபோது, "தமிழ்நாட்டில் இப்போதைக்கு இது போன்ற அபராத தள்ளுபடி நடைமுறைகள் வரவில்லை. இது தொடர்பான எந்த ஆலோசனைகளும் நடைபெறவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, தமிழக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி அபராதம் செலுத்துவதிலிருந்து தப்பிக்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments