Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் வரலாறு காணாத காற்று மாசுபாடு.. நாளை கிரிக்கெட் போட்டி நடக்குமா?

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (14:09 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும்  இரு அணிகளுமே அரையிறுதிக்கு செல்ல முடியாது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் இல்லாத போட்டியாக கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்கள் ஆக டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக அருண்ஜெட்லீ மைதானத்தில் உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சியில் இலங்கை மற்றும் வங்கதேச வீரர்கள் இன்று ஈடுபடவில்லை. 
 
மேலும் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் நிபுணர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே நாளைய போட்டி நடைபெறும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments