Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வருடம் தீபாவளிக்கு விடுமுறை இல்லை: கல்வி அமைச்சரின் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (23:55 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் இன்று மாநிலம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. எனவே ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஓடுவதாக தகவல் வந்துள்ள நிலையில் நாளைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மகாராஷ்டிர கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ள அதே நேரத்தில் பின்னாலேயே ஒரு அதிர்ச்சி அறிவிப்பும் வெளிவந்துள்ளது.



 
 
இந்த விடுமுறையை ஈடுகட்ட வரும் தீபாவளி அன்று இருக்கும் விடுமுறை ரத்து என்பதுதான் அந்த அதிர்ச்சியான அறிவிப்பு. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மழை பெய்தாலும் பரவாயில்லை, நாளை பள்ளிக்கு வருகிறோம், தீபாவளி விடுமுறையை ரத்து செய்ய வேண்டாம் என்று மாணவர்கள் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த அறிவிப்பு நியாயமான அறிவிப்பு இல்லை என்று அனைத்து தரப்பினர்களாலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments