Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஸ்டைலை கடைபிடிக்கும் தீபா

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (22:32 IST)
சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காத அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு பல அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் நேரில் ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் செய்தனர். குறிப்பாக இளையதளபதி விஜய் அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவி செய்ததோடு, அனிதாவுக்கு நானும் ஒரு சகோதரன் என்று நம்பிக்கை அளித்தார்.



 
 
இந்த நிலையில் அனிதா மரணம் அடைந்து 17 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் விஜய்யை போலவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் நாளை அரியலூர் சென்று அனிதா குடும்பத்தினர்களை சந்திக்கவிருப்பதாகவும், அவருடன் அவருடைய கணவர் மாதவனும் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அரியலூர் செல்லும் தீபா அனிதா குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறுவது மட்டுமின்றி நிதியுதவியும் செய்யவுள்ளார். தீபாவின் இந்த விசிட் அனுதாபமா? அல்லது அரசியலா? என்று தெரியவில்லை என்றாலும் அனிதா குடும்பத்தினர்களுக்கு ஆறுதலும், நிதியுதவியும் கிடைக்கின்றது என்பதை பொறுத்தவரையில் நல்ல விஷயம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments