Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்! – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (11:57 IST)
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி வைரஸ் பரவி வரும் நிலையில் இது குழந்தைகளை அதிகம் தாக்குவதாக உலக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உடலில் சிகப்பு நிறத்தில் ஏற்படும் கொப்புளங்கள் தக்காளி காய்ச்சல் எனப்படுகிறது. சமீபமாக இந்த காய்ச்சல் இந்தியாவில் கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் பல நாடுகளில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் பலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தக்காளி வைரஸ் குறித்து பிரபல மருத்து ஆய்வு இதழான லான்செட் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தக்காளி வைரஸ் குறிப்பாக குழந்தைகளை அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது. கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த வைரஸ் அதிகம் தாக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் 9 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவக்கூடியது என்பதால் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments