Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்! – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (11:57 IST)
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி வைரஸ் பரவி வரும் நிலையில் இது குழந்தைகளை அதிகம் தாக்குவதாக உலக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உடலில் சிகப்பு நிறத்தில் ஏற்படும் கொப்புளங்கள் தக்காளி காய்ச்சல் எனப்படுகிறது. சமீபமாக இந்த காய்ச்சல் இந்தியாவில் கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் பல நாடுகளில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் பலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தக்காளி வைரஸ் குறித்து பிரபல மருத்து ஆய்வு இதழான லான்செட் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தக்காளி வைரஸ் குறிப்பாக குழந்தைகளை அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது. கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த வைரஸ் அதிகம் தாக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் 9 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவக்கூடியது என்பதால் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments