தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (12:21 IST)
தெலுங்கானா மாநிலத்தில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து பொதுமக்கள் தக்காளியை அள்ளிச் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தக்காளி விலை கடந்த சில நாட்களாக கடுமையாக விலை உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தக்காளி கடைக்காரர் பவுன்சரை பாதுகாப்புக்கு வைப்பதும் தக்காளி வியாபாரத்தில் அதிக லாபம் கொண்ட விவசாயி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்வது உட்பட பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. 
 
இந்த நிலையில் தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகிய நிலையில் பொதுமக்கள் தக்காளியை அள்ளி செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் உள்ளனர். 
 
விபத்துக்குள்ளான லாரியில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள தக்காளி இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து டெல்லி சென்ற லாரி தெலுங்கானா மாநிலத்தில் கவிழ்ந்து அதிலிருந்து தக்காளியில் சிதறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments