Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரும்ப பெறப்பட்டது சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..!

Siva
திங்கள், 1 ஏப்ரல் 2024 (08:42 IST)
ஏப்ரல் 1 முதல் அதாவது இன்று முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சற்றுமுன் அந்த கட்டண உயர்வு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் லாரி உரிமையாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது குறித்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் ஏழு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குனர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments