Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயரும் சுங்கச்சாவடி கட்டணம்; மாநிலங்கள் கடும் எதிர்ப்பு!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (12:07 IST)
இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கக்கட்டணமும் அதிகரிக்கப்படுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.85வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

சரக்கு வாகனங்களுக்கு ரூ.240 வரை சுங்கக்கட்டணம் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சுங்கக்கட்டண உயர்வுக்கு பல மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பஞ்சாப் விவசாய சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments