Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்று ரயில் மறியல் நடத்த திட்டம்!

Siva
வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:35 IST)
கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் பிப்ரவரி 13ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி செல்லும் பேரணி போராட்டம் நடத்தினர். 
 
இந்த போராட்டத்தை தடுக்க ஹரியானா மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் அவற்றையெல்லாம் உடைத்து விட்டு விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடத்திய போராட்டத்தின் அடுத்த பகுதியாக இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக விவசாயிகள் கூறி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் ஒருபக்கம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் இன்று பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதாகவும் இன்றைய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஒருவேளை பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் இன்னும் தீவிரமாக போராட்டம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments