இன்று முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர்: நாளை பட்ஜெட் தாக்கல்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (07:30 IST)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. 
 
ஜனவரி 31 ஆம் தேதியான இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடுகின்றன
 
இதனை அடுத்து நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2022-23ஆம்  ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்
 
இன்றைய குடியரசுத் தலைவர் உரையில் பல அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்றும் அந்த அறிவிப்புகள் ஐந்து மாநிலத் தேர்தலை கணக்கில் கொண்டு காணப்படும் என்றும் கூறப்படுகிறது
 
அதே போல் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் பல சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் இந்த பட்ஜெட்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments