இன்னைக்கு இந்தியாதான் ஜெயிக்கணும்..! பாகிஸ்தான் தோக்கணும்! சிறப்பு யாகம் செய்த விஷ்வ ஹிந்து பரிஷத்!

Prasanth K
ஞாயிறு, 14 செப்டம்பர் 2025 (12:34 IST)

இன்று ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர்.

 

ஆசியக்கோப்பை 2025 டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து துபாயில் நடந்து வருகிறது. அதில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இரு நாடுகளுக்கிடையே பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக போர் நடந்த நிலையில் இந்த போட்டி நடக்கக் கூடாது என பலமான எதிர்ப்புகள் பல தரப்பில் ஏற்பட்டது.

 

ஆனாலும் இன்று இரவு 8 மணியளவில் போட்டிகள் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்க வேண்டும், இந்தியா ஜெயிக்க வேண்டும் என உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் கோபால் ராய் பேசியபோது “இந்தியா நிச்சயமாக இதில் வெற்றி பெறும். இந்த போட்டி நடக்கக்கூடாது என சிலர் கூறுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்த முடியும் என காட்டுவதற்கு இது நமக்கு ஒரு வாய்ப்பு” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments