Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதன்முறையாக 8 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!

முதன்முறையாக 8 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!
, திங்கள், 22 நவம்பர் 2021 (09:50 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வந்த நிலையில் இந்த ஆண்டில் இன்று முதல் முறையாக தினசரி பாதிப்புகள் மிக குறைவாக பாதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,45,18,901 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 249 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,65,911 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,39,34,547 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,18,443 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் மூலமாக போதைப்பொருள் விற்பனை! – நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்கு!