Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கல்!!

Arun Prasath
புதன், 11 டிசம்பர் 2019 (08:39 IST)
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும். மேலும் இச்சட்டப்படி அகதிகளாக குடியேறும் இந்த 6 மதத்தவர்களும் 6 ஆண்டுகள் இங்கு வசித்திருக்க வேண்டும் என்பது விதியாகும். முன்னதாக விதிப்படி 11 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதில் இஸ்லாமியர்களும் இலங்கை தமிழர்களும் இல்லை என்பாதால் இதற்கு காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கு இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் 130 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர், மாநிலங்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடத்த 6 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சட்ட திருத்தத்தை கைவிடுமாறு வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், இயக்குனர் நந்திதா தாஸ் உள்ளிட்ட 600 க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments