Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (06:34 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் அரசியல் கட்சி தலைவர்களிடமும் கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது
 
இருப்பினும் மத்திய அரசு இதையெல்லாம் காதில் வாங்காமல் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. வடமாநிலங்களில் உள்ள ஒரு சில மாநிலங்களில் ரூ.100 தாண்டியுள்ள பெட்ரோலின் விலை தமிழகம் உள்பட ஒரு சில மாதங்களில் ரூ.100ஐ நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 91.45 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்துள்ளதாகவும் 84.77 ரூபாயாக ஒரு லிட்டர் விற்பனையாகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமின்றி சமையல் கேஸ் விலையும் உயர்ந்துள்ளதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக 10,000, திமுக 25,000: அண்ணா சொன்ன பாட்டாளிகள் கட்சி எங்கே? காயத்ரி ரகுராம்