350 கிமீ வேகத்தில் கரையை கடந்த டிட்லி புயல்: ஒடிஷாவில் பலத்த சேதம்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (07:26 IST)
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒடிஷா அருகே கரையை கடக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த புயலுக்கு டிட்லி என்று பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த புயல் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கரையை கடந்தது.

"டிட்லி" புயல் தீவிரமாக வலுப்பெற்று ஒடிசா - ஆந்திரா இடையே, கோபால்பூர் என்ற பகுதியில் மணீக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. அப்போது கடல் அலைகள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டதாகவும், பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் புயல் காரணமாக வட ஆந்திரா மற்றும் ஒடிசாவின் 5 கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  இன்று பிற்பகலுக்குள் புயல் வலுவிழந்து மேற்கு வங்க மாநிலத்தை நோக்கி நகரும் என்று புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் இன்று பலத்தமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments