Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றில் மிதந்த 5 சகோதரர்களின் பிணம்: பெற்றோர்கள் மாயமானதால் பரபரப்பு

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (22:06 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முதல் 6 வயதுடைய ஐந்து சகோதரர்கள் கிணத்தில் பிணமாக மிதந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சகோதரர்களின் பெற்றோர் தலைமறைவாகியிருப்பதும் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் செந்த்வா என்ற கிராமத்தை சேர்ந்த பட்டார் சிங் என்பவருக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவிக்கு நான்கு குழந்தைகளும் இன்னொரு மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இந்த ஐந்து குழந்தைகளும் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் ஐந்து குழந்தைகளின் உடலை மிட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி திடீரென மாயமாகியுள்ளனர். இரண்டாவது மனைவி தனது ஒரே மகன் பலியானதால் பேச்சுமூச்சின்றி உள்ளார். பட்டார் சிங்கையும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருவதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதுகுறித்து மேல் விசாரணை நடத்த முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

ஏப்ரல் 16 முதல் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi Qled ஸ்மார்ட் டிவி.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

வக்பு மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காத தமிழக எம்பி.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சா?

கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பாமகவில் ஜனநாயக கொலை! - ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments